×

பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம்… மேலும் ஒருவர் கைது..!!

திருப்பூர்: பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் கள்ளக்கிணறு பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

கைதாகிய செல்லமுத்து என்பவர் திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேந்தவர் என முதற்கட்ட தகவல் வெளியானது. அவரிடம் செய்த விசாரணையில் தொட்டம்பட்டி என்ற இடத்தில் கொலைக்கு பயன்படுத்திய கத்தியை காட்டுவதாக கூறிவிட்டு செல்லமுத்து தப்பிக்க முயன்றார். அப்போது கீழே விழுந்ததில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில், இந்த கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். சோனை முத்தையா என்பவரை கைது செய்துள்ளதாக திருப்பூர் மாவட்ட காவல் கங்கைப்பாளர் சாமிநாதன் தகவல் அளித்துள்ளார். இதற்கிடையே முக்கிய குற்றவாளியாக கருதப்படும் வெங்கடேசன் என்பவரை தனிப்படை போலீசார் நெருங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அலைபேசி எண்ணை வைத்து முக்கிய குற்றவாளியை போலீசார் நெருங்கி உள்ளதாக கூறப்பட்டது.

 

The post பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம்… மேலும் ஒருவர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Palladam ,Thiruppur ,Pallada ,Tiruppur ,
× RELATED பல்லடம் பெரியாயிபட்டி கிராமத்தில்...